செவ்வாய், 12 ஜூன், 2018

குண்டலினி என்றால் என்ன?

                     குண்டலினி   என்றால்    என்ன?

குண்டலினி   ஒரு  நுட்பமான   பிராண  சக்தி.இது  கண்ணினால்  பார்க்ககூடிய   உடல்  உறுப்பு  அல்ல.குண்டலினி ஒரு  பெளதிக சக்தி   ஆகும்.                             
                                           
                                         
 இதன்  உறைவிடம்   முதுகில்   உள்ள   தண்டுவடம்   என்கின்றனர், சில  யோகிகள்   தொப்புளுக்கும்,தண்டுவட(முதுகெலும்பு) அடிபாகத்துக்கும்  நடுவே  உள்ளது  என்று  நம்மப்படுகிறது.குண்டலினி எல்லோருக்கும்  கைவசப்படும் மாந்திரீகம்  அல்ல.அது  ஒரு   பிராண  சக்தி  ஆகும்.
யோகிகள்  முதுகெழும்பில்  சுழுமுனை  நாடி  உள்ளது  என்று  கூறுகின்றனர்.அவை  சூரிய,சந்திர, சூட்சும  நாடிகள்   ஆகும்.குண்டலினி  சக்தி  இந்த  மூன்று  நாடிகள்   மூலமாகவே   இயங்குகிறது.நாடிகளின்   வழியே   பிராண  வாயு   இயங்குகிறது.குண்டலினி  எழும்பினால்,அது கீழ்  மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு  தலையில்  உள்ள  உச்சி சஹஸ்ராரம்  அடைந்து விட்டால் பல  சித்துக்கள்,ஆற்றல்கள்  கைவசப்படும் என்று  யோகிகள்  நம்புகீன்றனர்.
குண்டலினி   மேல்   எழும்  பாதைகள்:குண்டலினியானது சூட்சும   நாடி   மூலம்   அல்லது  முதுகெழும்பு  மையப்  பகுதியின்   வழியே   மூளையை   அடைகிறது.இங்கு  அது   பரம்பொருளுடன்   சேர்கிறது.ஒரே  தடவையாக குண்டலிணி   கீழிருந்து  மேல்   தாவி   விடாது.வழியே  6  சக்கரங்கள்   உள்ளன.இவற்றைக்  கடக்க  வேண்டும்.

ஆறு   மலர்கள்:
அடி    மூலாதாரத்திலிருப்பது(தண்டுவடத்தின்   அடிபாகம்)  சிவப்பு நிறத்  தாமரை,சிவப்பு  வண்ணமாக,4  இதழ்கள்  உடையதாக   நீனைக்கப்படுகிறது.இந்த   நிலையே அடைந்த  மனிதருக்கு  ஞாபக சக்தியும்,உள்மனதைக்  கட்டுப்படுத்தும்  திறனும்   கிட்டும்.இந்த நிலையே  அடைந்தவுடன்  மொட்டு  போலிருக்கும்  தாமரை  மலரும்.
இரண்டாவது  சக்கரத்தில்  6 இதழ்கள்  உள்ள குங்கும  சிவப்பு  மலர்.இங்கு  இருப்பது  மனிதரின்  மிருக  வெறி-பிறப்புறுப்பில்  உறைவது. இந்த  வெறியை  ஆன்மிக  சக்தியாக  மாற்றும்  சக்தி.
மூன்றாவது  சக்கரம் இது  தாமரை  மிகுந்த  சிவப்பு  வண்ணத்துடன்  10 இதழ்களாக  இருக்கும்.இந்த  இடம்  வந்த  உடன்  உலகின்   இன்பங்கள்,லெளகித  சாதனைகள்  நமக்கு  முழு  திருப்தியை  தராது  என்ற  உண்மை   புலப்படும். இந்த   மூன்றாவது  இடத்தில்தான்  கவனமாக  இருக்க  வேண்டும்.இங்கு  கீழே  தள்ளும்  வாயு  பலமாக இருப்பதால்  குண்டலினி  முறைகளை  சரியாக  கடைப்பிடிக்காதவர்கள்  கீழே  தள்ளப்படுவார்கள்.
இதயமே  நான்காவது  சக்கரம்  12 இதழ்கள்  கொண்ட  நீலநிற  தாமரை  இதன்  அடையாளம்.இந்த  நிலையில்  அமைதி,உலகில் உள்ள   அனைவரின்  மேல்  அன்பு  பாசம் இவை   ஏற்ப்படும்.ஐந்தாவது  சக்கரம்  கழுத்து  16இதழ்களுடைய  பழுப்பு தாமரை இது.அழகு,நல்லகுணம்,உண்மை  இந்த குணங்கள்  இந்த  இடத்தை  அடைந்த  யோகிகளுக்கு  உண்டாகும்.இந்த  நிலை  துய்மையான  நிலையாகும்.ஆறாவது  நிலை  கண் புருவங்கள்  இது  2இதழ்கள்  உள்ள வெண்தாமரை  ஆகும்.இங்கு யோகிகளுக்கு  முழுமையான  ஞானம்  கிடைக்கும்.
ஏழாவது  நிலை  சஹஸ்ராரம்.சஹஸ்ராரம்  என்றால் ஆயிரம் தாமரைகள்,துய்மையான,சிறந்த வெண்மை  நிறத்தை  உடையவை.இங்குதான்  குண்டலினி பரம்பொருளுடன்  சேரந்து  சமாதீயடைகிறது.ஒவ்வொரு  யோகியின்  லட்சியம்  இந்த  சமாதி.
    
(குண்டலினி   எற்றும்  மந்திரங்களை  அடுத்த  பதிவில்  காணலாம்).


       




0 கருத்துகள்

கருத்துரையிடுக