வாதம் கூடினால் மனிதன் வாழ்கை நாசம் என்று கூறுவார் நம் முன்னோர்.வாத நாடி கூடினால் சந்திவாதம், கீழ்வாதம், முடக்குவாதம் என 21 வகையான வாத நோய்கள் உண்டாகும்.மேலும்,காது,தலைவலி,சக்தியின்மை,பொறுமையின்மை,சுறுசுறுப்பின்மை,நாவறச்சி,
குறைவான நினைவாற்றல்,தூக்கமின்மை,ரத்த ஓட்டம் குறைவதால் உடலில் மதமதப்பு ஏற்படுதல்,மூட்டுவலி,தலைமுடி,நகம்,கால் பாதங்களில் வெடிப்பு ஏற்படுதல்,உடல் வாயு அதிகரித்தல்,ஏப்பம் போன்ற நிறைய நோய் அறிகுறிகள் தோன்றும் அவைகளுக்கு நிவாரணம் தருவது இந்த முத்திரை ஆகும்.
செய்முறை:
இடதுக்கை ஆள்க்காட்டிவிரல் மற்றும் நடுவிரலை மடக்கி உள்ளங்கையில் வைத்து அதன் மீது கட்டைவிரலால் அழுத்தி பிடிக்கவும்.மற்ற விரல்கள் நீட்டியபடி இருக்கட்டும்.
வலதுக்கை நடு விரல், ஆள்க்காட்டி விரல் நுனியில் தொட்டப்படி,கட்டை விரல் இவ்விரண்டு விரல்கள் மீதும் பதிய வேண்டும்.
இம்முத்திரையை காலை 6மணி முதல் மாலை 6மணி வரை இந்த முத்திரை எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம்.குறைந்தபட்சம் 15நிமிடங்கள் நல்ல பலனை அளிக்கும்.
பலன்கள்:
தலைவலி,மூட்டு வலி, முதுகு வலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது.மூளைகளின் செல்களுக்கு பிராண சக்தியும்,பிராண வாயுவும் அதிகம் கிடைப்பதால் மூளை சுறுசுறுப்பாகிறது.தோல் வெடிப்பு,முடி உதிர்தல் இவைகளை சீராக்குகிறது.மலச்சிக்கலை சரியாக்குகிறது.உடல் வலிகளை போக்குகிறது.
0 கருத்துகள்
கருத்துரையிடுக