புதன், 13 ஜூன், 2018

மூளையின் நியூட்ரான் செயல் திறனை அதிகரிக்க தோப்புகரணம்

தோப்புகரணம்   வந்த     வரலாறு:

                   கஜமுகாசுரன்   என்னும்     அசுரன்    இருந்தான்  அவன்   தான்   பெற்ற   வரத்தின்    வலிமையால்     தேவர்களை   அடிமைப் படுத்தி, 
அவர்களுக்கு   கொடுமை   செய்து    வந்தான்.தன்னை  காணும் போதெல்லாம்   தோப்புகரணம்  போட  வேண்டும்  என்று   தொல்லை  செய்து     வந்தான். தேவர்கள்   அவன்   செய்த   கொடுமை   தாங்க  முடியாமல்   விநாயகரிடம்  முறையிட்டனர்.மனம்  கசிந்த  விநாயகர்,கஜமுகாசுரனை   சம்ஹாரம்    செய்ய   புறப்பட்டார்.விநாயகரையும்    தோப்புகரணம்   போடுமாறு  கஜமுகாசுரன்    ஆணையிட்டான்.மிகுந்த   கோபம்   அடைந்த  விநாயகர்  தன்   தந்தத்தால்   அவனைக்  குத்திக்   கொன்றார்.கஜமுகாசுரனை   அழித்ததற்கு  நன்றி   தெரிவிக்கும்   விதமாக  தேவர்கள்  விநாயகருக்கு   தோப்புகரணம்  போட்டு   மரியாதை   செலுத்தினர்.இவ்வாரே   விநாயகருக்கு   தோப்புகரணம்   இடும்   முறை   உண்டானது.

                                              

தோப்புகரணத்தின்   பலன்கள்:

தோப்புகரணம்   போடும்போது    நமது   காது   மடல்களை    பிடித்து  கொள்கிறோம்.காது  மடல்களில்  உடலின்   எல்லா  உறுப்புகளையும்   இணைக்கும்   புள்ளி   உள்ளது.

1.காது  மடல்களை     பிடித்து     தோப்புகரணம்     போடும்போது   உடலின்    எல்லா    உறுப்புகளும்   செயல்   படுவதற்கான    ஒரு      தூண்டுதல்   கிடைக்கிறது.

2.உட்கார்ந்து     எழும்  போது,காலில்   உள்ள   'சோலியஸ்'    என்னும்    தசை     இயங்க   ஆரம்பிக்கிறது.சோலியஸ்   தசையால்  உடலில்     ரத்த    ஓட்டம்    சீராகிறது.இதயத்தின்    தசைகளை    போன்றே    இது    வேலை    செய்கிறது.


செய்யும்    முறை:

முதலில்   நம்     தோள்பட்டை    அளவுக்கு  கால்களை  பிரித்துவைத்து   நிற்க  வேண்டும்.
இடது   கையால்    வலது    காது   மடலையும,வலது கையால்  இடது  காது   மடலையும்     பிடிக்க    வேண்டும்.
கட்டை  விரல்  உள்புறமும், ஆள்காட்டி     விரல்    வெளிபுறமும்    இருக்க   வேண்டும்.
தலையை    நேராக  வைத்து     மூச்சி  காற்றை    உள்ளிளுக்க    வேண்டும்.
நம்மால்    எந்த   அளவிற்கு   உட்கார  முடியுமே     அந்த   அளவிற்கு     உட்கார்ந்தால்   போதும்.
பின்பு  மூச்சுக்  காற்றை   வெளியிட்டவாறை    எழுந்து   நிற்க     வேண்டும்.
இதன்   மூலம்   நமது   தண்டுவடத்தின்  மூலாதாரத்தில்   சக்தி    உருவாகும்.
தினமும்  5 நிமிடம்   செய்தாலே   போதும்    வேறு   எந்த   பயிற்சியும்    செய்ய   தேவையில்லை.

0 கருத்துகள்

கருத்துரையிடுக