இந்த முத்திரை குண்டலினி முத்திரை (அல்லது) ஆண்மை அதிகரிக்கும் முத்திரை என்று அழைக்கப்படுகிறது.இது உடல் பலத்தை பெருக்கும் முத்திரை.ஆண்மை பெருக்க இது தான் சிறந்த வழி.உடலில் உள் ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசனவாய் சுருங்கும் இடத்தில் வந்து குவிகின்றன.அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட் டு உடல் சக்தி பெருகிறது.தாம்பத்தியத்திற்கான இரண்டாவது முக்கியமான முத்திரை இது.தந்திராவில் முக்கியமாக கருதப்படுவது செக்ஸ் மூலம் தியானம் ஆகும்.புத்தமதத் தந்திராவில் வஜ்ராயனத்தில் பெரிதும் இதைப் பொற்றுகின்றனர்.ஒரு பெண்ணும் ஆணும் புணர்வதை சக்தி-சிவத்தின் இணைப்பாகவே தந்திர யோகம் உருவப்படுகிறது.
செய்யும் முறை:
இரண் டு கைகளையும் தளர்வாக மூடுங்கள்.இடது முஷ்டி கீழாக இருக்க,அதன் மேல் வலது முஷ்டி வையுங்கள்.இடது ஆள்காட்டி விரலை நீட்டி,வலது கைவிரல்களின் உள்ளே விடுங்கள்.வலது கை விரல்களால்
இடது ஆள்காட் டி விரலை இருக்க பற்றிக் கொள்ளுங்கள்.வலது பெருவிரலைஇடது ஆள்காட்டி விரலின் நுனியில் மெதுவாகப் பதியச் செய்யுங்கள்.இதுவே குண்டலினி முத்திரை ஆகும்.
அமரும் முறை:
பத்மாசனம் (அல்லது) வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்யலாம்.முடியாதவர்கள் கால்கள் இரண்டையும் சம்மணமிட்டு அமர்ந்து செய்யலாம்.அல்லது நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.சுவாசம் சீராக இருப்பது அவசியம்.நேரம் 15-45 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:
குண்டலினி சக்தி தூண்டப்படும்.பாலியல் உணர்வு அதிகரிக்கும்.உடலில் புதிய உற்சாகம் பெருகும்.உயிர் சக்தி பலமடையும்.ஆண்மிக வளர்ச்சி உண்டாகும். மதனநீர் சுரப்பு குறைதல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
0 கருத்துகள்
கருத்துரையிடுக